காசுக்காக கல்யாண நாடகம்.. விஷ ஊசி போட்டு கணவனை தீர்த்துகட்ட சதி - திருப்பூரில் சிக்கிய கல்யாண ராணி

காசுக்காக கல்யாண நாடகம்.. விஷ ஊசி போட்டு கணவனை தீர்த்துகட்ட சதி - திருப்பூரில் சிக்கிய கல்யாண ராணி

திருப்பூர் மாவட்ட குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி (வயது 52). இவருக்கும் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 35 வயதான தேவிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மாமியாருக்கும் மருமகளுக்கு அடிக்கடி தகராறு வந்ததால் சுப்பிரமணி தாய் கோபித்துக்கொண்டு அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டார். நாம இந்த ஊர்ல இருக்க வேண்டாம் திண்டுக்கல்லுக்கு போயிடலாம் என தேவி அழைத்துள்ளார். சுப்பிரமணி திண்டுக்கல் செல்ல மறுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 15-ம் தேதி சுப்பிரமணிக்கு காய்ச்சல் வந்துள்ளது. அப்போது அவரது வலது காலில் தேவி ஊசி செலுத்தியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணி திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதாக மனைவி தேவி மீது சுப்பிரமணி குன்னத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது சுப்பிரமணிக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தேவி , கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவான தேவியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவர் திண்டுக்கல்லில் பதுங்கியிருக்கலாம் என்பதால் போலீசார் அவரை தேடி திண்டுக்கல்லுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் தேவிக்கு விஷ ஊசி வாங்கி கொடுத்தவர்கள் யார், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.
news18



 


Post a Comment

Previous Post Next Post