கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கு மரண தண்டனை

கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கு மரண தண்டனை

2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கு கேகாலை மாகாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கேகாலை காவல்துறைபிரிவுக்குட்பட்ட தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 2014.07.03 ஆம் திகதி இடம்பெற்ற விருந்தின் போது சிமெந்து கல்லினால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இன்றையதினம் இந்த உத்தரவை பிறப்பித்தார்.



 



Post a Comment

Previous Post Next Post