கிரீஸில் நேருக்கு நேர் ரயில் மோதி டஜன் கணக்கானோர் பலி

கிரீஸில் நேருக்கு நேர் ரயில் மோதி டஜன் கணக்கானோர் பலி

வடக்கு கிரீஸில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

நேற்று (28) மாலை சுமார் 350 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் சேவை ஒன்று சரக்கு ரயிலில் மோதியது. இதில் ஒரு வண்டி முற்றாக நசுங்கி, தீயில் வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.

லாரிசா நகருக்கு அருகே விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் பணியாற்றினர்.

கிரீஸில் சமீப வருடங்களில் நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.


 



Post a Comment

Previous Post Next Post