திருக்-குர்ஆன் தமிழாக்கம் -114

திருக்-குர்ஆன் தமிழாக்கம் -114


அத்தியாயம் - 114
ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

 


114:1. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

114:2. (அவனே) மனிதர்களின் அரசன்;

114:3. (அவனே) மனிதர்களின் நாயன்.

114:4. பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).

114:5. அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.

114:6. (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.

(முற்றும்)

SOURCE:eraivanainokki


 



Post a Comment

Previous Post Next Post