Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஆசிரியர்களிடம் இருக்கக் கூடாத பண்புகள்.


1️.கல்வித் திட்டத்தில் அரசாங்கம் மற்றும் கல்வி காரியாலயம் எதை வழிகாட்டுகின்றதோ அதை மீறி செயல்படக் கூடாது.

2.அதி விஷேட காரணம் இன்றி பாடசாலைக்கு வரும் நேரத்தை  மீற கூடாது.

 


3️.பாடசாலை வருகை நேரத்தை மீறும் போது அதிபர் சட்டத்தை அமல்படுத்தும் போது அதிபரின் நிர்வாகத்தை எதிர்க்கக் கூடாது.

4️.விடுமுறை சலுகையை துஷ்பிரயோகம் செய்ய கூடாது.

5️.கற்பித்தலில்முன்னேற்பாடு இல்லாமல் கவனக்குறைவாக செயல்பட கூடாது.(Notes of lesson) 

6️.ஆசிரியர்கள் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்ள கூடாது.

7️.ஆசிரியர்கள் ஒழுக்கமற்ற ஆடைகளை அணிய கூடாது.

8️.ஒழுக்கமற்ற வார்த்தை பிரயோகங்களை மாணவர்களிடம் பயன்படுத்த கூடாது.

9️.சுய விருப்பு வெறுப்பிற்காக மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்க கூடாது.

10.குடும்பப் பகை கோத்திரப் பகை அதிகார ஆதிக்கம் காரணமாக மாணவர்களை பழி வாங்கப்படக் கூடாது.

இவைகள் அனைத்தும் நடந்தது என்று கூறவில்லை. நடக்கக் கூடாது என்பது தான் இந்தப் பதிவு

ஆசிரியர்கள்  தன் கடமைகளை கடமை கோட்பாட்டின் கீழ் செய்வார்களாக இருந்தால் அதிபர் அழுத்தம் செய்யத் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.

ஆசிரியர் துறை என்பது தொழில் அல்ல அது  பாரிய  சேவையும் பொறுப்பும் என்பதை உணர்ந்து ஹராம் ஹலால் பேணி செயல்படுவது அவசியம்

சில உலமாக்கள் ஆசிரியர் சேவை என்பது நபித்துவ பணி என்று மேற்கோள் காட்டி பேசுவதை அவதானித்திருக்கின்றோம்.

அரசாங்கம் விடுத்துள்ள விதிகளை மீறுவதும் தன்னுடைய ஹலாலான உழைப்பை ஹராம் ஆக்கிக் கொள்ளும் செயலாகும் என்பதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.

NVQ மாணவர்களுக்கு இவ்வாறு பயன்படும் இந்த விடயத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி 

Deshamani,
wishva kerhi,
Lanka putra,
+94 77 897 99 77

Reliable independent network,
RinTv
founder and director 
Sri Lanka United front party
deputy leader


 





Post a Comment

0 Comments