வயதான சிங்கங்களுக்கு போக்கு காட்டி தப்பியோடிய குட்டி யானை..! நெகிழச் செய்யும் வீடியோ

வயதான சிங்கங்களுக்கு போக்கு காட்டி தப்பியோடிய குட்டி யானை..! நெகிழச் செய்யும் வீடியோ


வயதான சிங்கங்களுக்கு போக்கு காட்டி குட்டி யானை ஒன்று தப்பியோடி தனது உயிரை காப்பாற்றிக் கொண்டுள்ளது. 
 
இது தொடர்பான வீடியோ சுவாரசியமாக இருப்பதுடன், குட்டியானை தப்பியோடும்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிங்கம், புலி, முதலை உள்ளிட்டவை மற்ற விலங்குகளை வேட்டையாடி உண்கின்றன. அப்படி வேட்டையாடும்போது இரை தப்பிச் சென்று விடாதா என்ற எதிர்பார்ப்பு மனிதர்களுக்கு எழக்கூடும்.

அப்படி பலியாகப் போவது குட்டி விலங்கு என்றால் பதைபதைப்பு சற்று அதிகம் காணப்படும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று யூ டியூபில் லைக்ஸ்களையும், வியூஸ்களையும் குவித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவின் கிருகர் உயிரியல் பூங்காவில் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இங்கு தாயை விட்டு எப்படியோ பிரிந்த யானைக் குட்டி ஒன்று சிங்கங்களிடம் மாட்டிக் கொண்டது. அந்த சிங்கங்கள் வயதானவை என்பதால் அவற்றால் இரையை வேகமாக துரத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் தன்னை சிங்கம் நெருங்கியபோது, திடீரென குட்டியானை திரும்பியதால் சிங்கம் மிரண்டு பின்வாங்கியது.

வீடியோவை பார்க்க...

இதன்பின்னரும் குட்டி யானை ஓட்டம் பிடிக்க 3 சிங்கங்கள் பின்னாலேயே துரத்திச் சென்றன. ஒரு கட்டத்திற்கு மேல் சிங்கங்களால் ஓட முடியாத சூழலில் குட்டி யானை அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்று விட்டது. இந்த வீடியோ தற்போது 30 லட்சம் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது.

Source:news18


 



Post a Comment

Previous Post Next Post