Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-18


86.வினா : பிறர் வணங்கும் உன்னத நிலை யாருக்குக் கிட்டும்?
விடை : உலகில் வாழும் நெறியுடன் வாழ்பவருக்கு 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.(50)

87.வினா : ஒருவனுக்கு எல்லாச் சிறப்பும் யாரால் வரும்?
விடை : நற்பண்புமிக்க மனைவியால் 
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை,(53)

88.வினா : பெண்ணே பெருமைக்குரியவள் எப்போது?
விடை : கற்பென்னும் மனத்திண்மை மாறாத போது 
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்.(54)

89..வினா : பெண்களுக்குச் சரியான பாதுகாப்பு எது?
விடை: அவர்களின் மனக்கட்டுப்பாடே ஆகும் 
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை,(57)

90.வினா: இகழ்பவர் முன் சிங்கம் போன்ற நடை யாருக்கு இல்லை?
விடை: பண்புடைய மனைவியைப் பெறாதவர்களுக்கு 
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை.(59)

(தொடரும்)



 



Post a Comment

0 Comments