சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்.. டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மெயிலால் பரபரப்பு..

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்.. டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மெயிலால் பரபரப்பு..

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக டிஜிபி அலுவலகத்துக்கு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். இதனால் இந்த கடற்கரை பகுதிகளில் எப்போதுமே பரபரப்புடன் காணப்படும். மேலும் அதிகமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்வர்.

இந்நிலையில், சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒரு மர்ம நபர் இன்று டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன காவல்துறையினர் பெசன்ட் நகர் உள்ளிட்டட வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள இடங்களில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் யாரேனும் பொய்யான தகவல் அனுப்பியுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

news18


 



Post a Comment

Previous Post Next Post