கல்யாண செலவு ரூ.491 கோடி... அரண்மனையில் கொண்டாட்டம்... இந்தியாவே திரும்பி பார்த்த அடடே திருமணம்!

கல்யாண செலவு ரூ.491 கோடி... அரண்மனையில் கொண்டாட்டம்... இந்தியாவே திரும்பி பார்த்த அடடே திருமணம்!

இந்தியா அதன் செழுமையான திருமணங்களுக்கு பெயர் பெற்றது. குடும்பங்கள் தங்கள் மகனோ அல்லது மகளின் திருமணத்தை ஒரு பிரமாண்டமான நிகழ்வாக மாற்ற எந்த செலவையும் மிச்சப்படுத்தாது, ஒரு இணையற்ற கொண்டாட்டத்தை மேற்கொள்வர். சிலருக்கோ திருமண நிகழ்வுகளில் செலவுகளை செய்ய விருப்பமிருக்காது. அதனை சேமிக்க திட்டமிடுவார்கள். சிலருக்கு சமூக அழுத்தத்தினால் திருமண செலவுகள் நேரிடும். இப்படி பல வகைகளில் இந்திய கலாச்சாரத்தில் திருமண நிகழ்வுகளுக்கான செலவுகள் வேறுபடுகின்றன.

சமீபத்தில் இதுபோன்ற ஒரு பிரமாண்ட நிகழ்வுதான் பாரிஸில் நடந்தது. 26 வயதான மெடலைன் ப்ரோக்வே என்பவரின் திருமணம், ஆடம்பர திருமணங்களின் கருத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது. கிட்டத்தட்ட 491 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றதாக தெரிகிறது.
கார் டீலர்ஷிப் பிசினஸைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மெடலைன் ப்ரோக்வே, ஜேக்கப் லாக்ரோன் என்பவரை பாரிஸில் ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் பிரமாண்டமான திருமணத்தின் வெளிப்பாடு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், இந்த திருமண விழா ஒரு வாரம் முழுவதும் நீடித்தன. மெடலைனும் ஜேக்கப்பும் ஆடம்பரமான ஆடைகளை அணிந்து, அவர்களது பிரத்யேக திருமண ஆடைகளுடன் வந்தது விருந்தினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், திருமணத்திற்கு வந்த அனைத்து விருந்தினர்களும் தனிப்பட்ட ஜெட் விமானங்களில் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

திருமண இடம் என்பது ஒரு அரண்மனையில் நடந்ததாக தெரிகிறது. அமெரிக்க இசைக்குழுவான மரூன் 5 நிகழ்ச்சியுடன் விழாவை சிறப்பித்தது. மேலும், அரண்மனையும் ஏராளமான பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவிய இந்த வீடியோ ஒரு வகையில் வைரலானாலும் மறுபுறம் நெட்டிசன்களிடையே விவாதங்களையும் கிளப்பியது. பார்ப்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தவே இந்த ஆடம்பர திருமணத்தை மேற்கொண்டதாக தம்பதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவர்களை பொருத்தவரை, எல்லைகளையும் எதிர்பார்ப்புகளையும் தாண்டிய கொண்டாட்டமாக இந்த திருமணம் பார்க்கப்படுகிறது.

news18



 



Post a Comment

Previous Post Next Post