ஓடும் பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை : பயணிகள் கண் முன்னரே நடந்த கொடூரம்.. உ.பி-யில் அதிர்ச்சி !

ஓடும் பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை : பயணிகள் கண் முன்னரே நடந்த கொடூரம்.. உ.பி-யில் அதிர்ச்சி !

உத்தரப்பிரதேச மாநிலத்திள் 20 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் 9-ம் தேதி இரவு உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து ராஜஸ்தான் மாநிலமான ஜெய்ப்பூருக்கு தனியார் பேருந்து ஒன்றில் சென்றுகொண்டிருந்துள்ளார்.

இந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த பெண் ஓட்டுநர் இருந்த இடத்துக்கும் அருகே அமர்ந்துள்ளார். இந்த பேருந்தை ஆரிப் என்பருர் ஓட்ட மற்றொரு ஓட்டுநராக லலித்தும் அங்கே இருந்துள்ளனர். சிறிது நேரம் இருவரும் அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

இதனிடையே பேருந்தில் பயணிகள் அனைவரும் உறங்கியதும், லலித் பயணிகள் இருந்த பகுதியின் கதவை அடைத்து அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சல் போட்டுள்ளார்.

ஓடும் பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை : பயணிகள் கண் முன்னரே நடந்த கொடூரம்.. உ.பி-யில் அதிர்ச்சி ! 
இதனால் சத்தம் கேட்டு பயணிகள் எழுந்து கதவை திறக்க முயன்றுள்ளனர். ஆனால், அது பூட்டப்பட்டிருந்ததால் பயணிகளால் அதனை திறக்க முடியவில்லை. இதனால் துணிச்சலடைந்த இரு ஓட்டுநர்களும் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் பயணிகள் அங்கிருந்த திடமான பொருளை வைத்து கதவை உடைத்து ஆரிப் என்பவனை பிடித்துள்ளனர். ஆனால், மற்றொரு நபரான லலித் தப்பியோடித்துள்ளார். இது குறித்து காவல்துறையில் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆரிப்பை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kalaignarseithigal



 



Post a Comment

Previous Post Next Post