Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தானில் யாசகம் மலேசியாவில் சொகுசு வாழ்க்கை : வைரலாகும் இளம் பெண்ணின் காணொளி

இளம் யுவதி ஒருவர் பாகிஸ்தானில் யாசகம் பெற்று மலேசியாவில் சொகுசு வாழ்க்கை வாழும் தகவலொன்று வெளியாகி அவரின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது.

லைபா என்ற குறித்த பெண் கடந்த ஐந்து வருடங்களாக பாகிஸ்தானில் யாசகம் பெற்று அதிக பணத்தை சம்பாதித்து வைத்துள்ளார்.

செல்வந்தராகவேண்டும் என்ற குறிக்கோளில் இவர் மக்களிடம் பல பொய்களை கூறி பணம் கேட்பதாகவும், மக்கள் அதிகம் விசாரிக்காமல் பணத்தை கொடுப்பதாகவும் குறித்த பெண் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது அடையாளத்தை மறைக்க தான் விரும்பவில்லை எனவும், மறைக்க முடியாத காரணத்தினால் உண்மையை கூறுவதாகவும் அந்த பெண் குறிப்பிட்டார்.
தனக்கு மலேசியாவில் சொந்தமாக 2 சொகுசு வீடுகளும் 2 கார்களும் உள்ளதாக அவர் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.

ibctamil


 



Post a Comment

0 Comments