மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து தன்னை நீக்கியிருக்கும் நிலையில் ரோகித் சர்மா இதுவரை எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவர் மும்பையில் இருந்து இப்போது தென்னாப்பிரிக்கா சென்றிருக்கிறார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்திருக்கிறது. அதில், இதுவரை அணியை வெற்றிகரமாக வழிநடத்திய ரோகித் சர்மாவுக்கு நன்றி. இனி வரும் காலத்தில் அணிக்கு களத்திலேயேயும், வெளியேயும் மிகப்பெரிய ஆதரவை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் ஒரு சில காரணங்கள் வெளியாகியுள்ளது. அதில் அடுத்த சில ஆண்டுகளுக்கு அணியை வழிநடத்த இளம் வீரர் வேண்டும் என்ற அடிப்படையில் ஹர்திக் பாண்டியாவை அந்த அணி கேப்டனாக நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் ரோகித் சர்மாவின் பார்ம் மற்றும் பேட்டிங்கின் மீதும் கேள்விகள் எழுந்திருக்கிறது. ரோகித் சர்மா இப்போது இந்திய அணியின் 20 ஓவர் பார்மேட்டில் விளையாடுவதில்லை. ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருவதால், அவருக்கு பதிலாக 20 ஓவர் பார்மேட்டில் இந்திய அணியை வழிநடத்தும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
ரசிகர்களை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவுக்கு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். 5 ஐபிஎல் கோப்பைகளையும், ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று கொடுத்த கேப்டனுக்கு மும்பை செய்திருப்பது அவமானம் என்று விமர்சித்துள்ளனர். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ் எண்ணிக்கையும் அதிரடியாக குறைந்துள்ளது. ரோகித் சர்மா எதிர்வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக களமிறங்கக்கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
zeenews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
விளையாட்டு