Ticker

6/recent/ticker-posts

26-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

(நபி வழியில் தொழுகை)



24. அத்தஹிய்யாத் & ஸலவாத் மற்றும் துவாக்களை ஓதுதல்:

முதல் அத்தஹிய்யாத்தின் போது:

அத்தஹிய்யாத் ஓதுவதோடு நபியவர்கள் மீது முழுமையாக – ‘இன்னக ஹமீதுன் மஜீத்” வரை ஸலவாத் கூற வேண்டும்.

நபியவர்கள் இரு அத்தஹிய்யாத்களிலும் தன் மீதே ஸலவாத் கூறியிருக்கிறார்கள் (நஸாஈ)

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ،

அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு .

அ‌ல்லது

التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ “.

அத்தஹிய்யா(த்)துல் முபார(க்)கா(த்)துஸ் ஸலவா(த்)துத் தய்யிபா(த்)து லில்லாஹி அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் நபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஆலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹி

இரண்டில் ஏதாவது ஒன்றை ஓதலாம்.

ஸலவாத்:

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ “.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.

இரண்டாவது அத்தஹிய்யாத்தின் போது :

அத்தஹிய்யாத் ஓதுவதோடு ஸலவாத் முழுமையாக கூற வேண்டும். அத்தோடு 04 விடயங்களிலிருந்து பாதுகாப்பு கோருமாறு நபியவர்கள் கூறினார்கள்.

‘உங்களில் ஒருவர் கடைசி அத்தஹிய்யாத் ஓதி முடித்தால் நான்கு விடயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரவும் :

اَللّٰهُمَّ إِنِّـيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ

நரக வேதனை, கப்ரு வேதனை, வாழ்வினதும் மரணத்தினதும் சோதனைகள், தஜ்ஜாலின் தீங்குகள் ஆகியவையாகும்” (முஸ்லிம்).

அதன் பின் தனக்கு தேவையானற்றை அல்லாஹ்விடம் கேட்டு துஆ செய்யமாறும் நபியவர்கள் கூறினார்கள். அவ்வாறான பல துஆக்களை நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு கற்று கொடுத்திருக்கிறார்கள் (புஹாரி, முஸ்லிம்).

இரண்டாவது அத்தஹிய்யாத்தில் அத்தஹிய்யாத்தும் ஸலவாத்தும் ஓதி முடிந்த பின் ஓத வேண்டிய துஆக்களாவன:

اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ

அல்லாஹ்வே! நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், எல்லை மீறிச் செய்ததையும், என்னைவிட நீ அதிகம் அறிந்திருக்கும் என் குற்றங்களையும், எனக்கு நீ மன்னித்துவிடு! நீதான் முற்படுத்துபவன்; பிற்படுத்துபவன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (ஸஹீஹ் முஸ்லிம்)

اَللّٰهُمَّ إِ نِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَّلَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

அல்லாஹ்வே! நிச்சயமாக நான் எனக்கு அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன்; உன்னைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யாருமில்லை; உன் புறத்திலிருந்து எனக்கு விசேஷமான மன்னிப்பை வழங்கு! எனக்குக் கருணை காட்டு! நிச்சயமாக நீதான் மிக்க மன்னிப்பாளன்; நிகரற்ற அன்புடையவன். (ஸஹீஹுல் புகாரி)

اَللّٰهُمَّ أَعِنِّيْ عَلٰى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

அல்லாஹ்வே… உன்னை நினைவு கூருவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்! (ஸுனன் அபூதாவூது)

(தொடரும்)

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)


 



Post a Comment

0 Comments