பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன்: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன்: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு நெதன்யாகு மீது இஸ்ரேலில் தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவரும் நிலையில் அவர் பதவி விலக போவதில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலை வழிநடத்தி வருகிறேன், நான் பிரதமராக இருந்த காலத்தில் இஸ்ரேல் பலமாகிவிட்டது. காஸாவில் முழுமையான வெற்றியைப் பெற இன்னும் கால அவகாசம் தேவை.

முடிந்தவரை நமது ராணுவ வீரர்களின் உயிரை பாதுகாத்து கொண்டே முன்னேறி வருகிறோம். எங்கள் நடவடிக்கைகளில் 8,000க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஹமாஸின் இராணுவ திறன்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன."

காசா இராணுவ மயமாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, யுத்தம் முடிவடைந்த பின்னரும் நான் ஆட்சியில் நீடிக்க விரும்புகிறேன். பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக, "ஹமாஸ் பல நிபந்தனைகளை விதித்துள்ளது, அதை நாங்கள் ஏற்கவில்லை.

அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சாத்தியமானதாக இருந்தால் மட்டுமே ஒப்பந்தம் சாத்தியமாகும். இந்த பிரச்சினையில் ஒரு இயக்கம் உருவாகும் சாத்தியத்தை நாங்கள் காண்கிறோம் ஆனால் தவறான வழியில் எதிர்பார்ப்புகளை எழுப்ப விரும்பவில்லை.

நாங்கள் எங்கள் முயற்சிகளை தொடர்வோம் ஆனால் ஹமாஸின் சட்ட விரோதமான நிபந்தனைகளை ஏற்க மாட்டோம்." என தெரிவித்துள்ளார்.

tamilwin


 



Post a Comment

Previous Post Next Post