
இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் உல்லாசப்பயணம்
இலங்கை அரசியல் ஒரு சாக்கடை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.ராஜபக்சாக்கள் இலங்கையை கிண்டிக் கிளறி ,சுருட்டி ,நாசம்பன்னி மக்களை படுகுழியில் தள்ளிவிட்டு ,ரணிலின் கையில் கொடுத்தார்கள்.
ரணிலை எப்போதுமே இலங்கை மக்கள் நம்புவதில்லை.ரணில் ஒரு தரங்கெட்ட தலைவர் என்று இலங்கை மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
எனினும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மக்களை ஏற்றுக்கொள்ள வைத்துள்ளது.
நாடு ரணிலின் கைக்கு மாறியதைத் தொடர்ந்து,நடக்கின்ற ஊழல்களைப் பார்க்கின்றபோது ராஜபக்சாக்களே பரவாயில்லை என்றே தோன்றுகின்றது.
சுகாதார அமைச்சில் பாரிய ஊழல் ,இலங்கை மின்சார சபையில் மிகப்பெரும் ஊழல் என்று பல அமைசுக்களிலும் ஊழல்கள் தலை விரித்தாடுகின்றது.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் இன்பச் சுற்றுலா பற்றிய ரகசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வெளியிட்டுள்ளார்.
துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியகாவுல்லா என்ற இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (09) உல்லாசப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) குற்றஞ்சாட்டினார்.
மக்கள் பெரும் துன்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கடலில் பார்ட்டி வைத்துள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இலங்கை துறைமுக அதிகாரசபை இந்த இரண்டு சிறிய இழுவைப் படகுகளையும் ஒதுக்கியுள்ளதுடன், இவற்றில் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்து உணவு மற்றும் குளிர்பானங்களையும் அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த உல்லாசப் பயணத்திற்கு எடுத்துச் சென்ற இரண்டு கப்பல்களும் துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணலை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு காப்புக் கப்பல்கள் எனவும் துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐம்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த இன்ப பயணத்திற்காக துறைமுக அதிகாரசபை 25 இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவிட்டுள்ளதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவினால் தயாரிக்கப்பட்ட இந்த இன்ப பயணத்திற்கு தேவையான உணவு மற்றும் பானங்கள் மற்றும் பொருட்களின் பட்டியலை வழங்குமாறு திங்கட்கிழமை (08) துறைமுக அதிகார சபையின் தலைவரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடிதத்தின் படி, சீஸ் சாண்ட்விச்கள், வெண்ணெய் கேக், ரோல்ஸ், ஐஸ் காபி, பேப்பர் கப், சிறிய கண்ணாடி, கரண்டி மற்றும் முட்கரண்டி, சிறிய தட்டுகள், நாற்காலிகள் (கவர்களுடன்) ஒவ்வொரு வகையிலும் 55, 60 தண்ணீர் போத்தல்கள் , 5 டிஷ்யூ பாக்கெட்டுகள் , 10 நாற்காலிகள் மற்றும் மேசைகள் கொண்ட கூடாரமொன்று கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த கடிதத்தில் எம்.பி.க்களுக்கு உணவு வழங்க 5 துறைமுக ஊழியர்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களும் டிசம்பர் 13 ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளன.
புத்தாண்டின் ஆரம்பத்திற்காக அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தயார்படுத்தப்பட்ட கொழும்பு துறைமுக வளாகத்தின் குறுகிய கடற்படை சுற்றுப்பயணத்தில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தனித்தனியாக அழைப்பிதழ்களை வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது.
சுபாலன்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments