
கேள்வி:
ஒரு சிறிய பெண் பிள்ளைக்கு மாதத்தீட்டு ஏற்பட்டுவிட்டது. அவள் அறியாமை காரணமாக அந்நாட்களில் நோன்பு நோற்றுள்ளாள். அவள் மீதுள்ள கடமை என்ன?
பதில்:
அவள் மாதத்தீட்டுடைய நேரத்தில் பிடித்த நோன்புகளைக் கழாச் செய்ய வேண்டும். அவள் அறியாமல் செய்திருந்தாலும் மாதத்தீட்டுடைய நேரத்தில் பிடிக்கப்பட்ட நோன்பு ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது, அது (ஸிஹ்ஹத்) அங்கீகரிக்கத்தக்க நோன்பும் அல்ல. கழா நோன்பைப் பிடிப்பதற்குக் கால வரையறை இல்லை. (அவள் அந்த நோன்புகளைக் கழாச் செய்ய வேண்டும்.)
இதற்கு மாற்றமான ஒரு மஸ்அலாவும் உள்ளது. ஒரு சிறிய பெண் பிள்ளைக்கு மாதத்தீட்டு வந்துவிட்டது. அவள் வெட்கம் காரணமாகக் குடும்பத்தாரக்குச் சொல்லவில்லை. அவள் நோன்பு நோற்பவளாகவும் இருக்கவில்லை. இந்த நிலையில் உள்ள பெண் விடுபட்ட அந்த மாத நோன்பைக் கழாச் செய்ய வேண்டும். ஏனெனில், ஒரு பெண் பருவ வயதை அடைந்து விட்டால் என்பதற்காக அடையாளமாக மாதத்தீட்டு உள்ளது. பருவ வயதை அடைந்துவிட்டால் மார்க்கச் சட்டத்தைப் பேணுவது கட்டாயமாகும் என்ற அடிப்படையில் அவள் பிடிக்காமல் விட்ட அம்மாதத்திற்கான நோன்பைக் கழாச் செய்ய வேண்டும்.
(ஷைய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்)
கேள்வி:
ரமழான் மாதத்தின் முதல் நாள் ரமழான் பிறை கண்டதை அறிவிப்பதற்கு முன்னரே ஒரு மனிதர் தூங்கிவிட்டார். ரமழான் வந்துவிட்டதை அறியாத அவர் காலையில் நோன்பு நோற்கும் நிய்யத்துடனும் தூங்கவில்லை. சூரியன் உதித்த பின்னர்தான் இன்று ரமழானின் முதல் நாள் என்பதை அறிகின்றார். இந்நிலையில் அவர் என்ன செய்வார்? குறித் நோன்பை அவர் கழாச் செய்ய வேண்டுமா?
பதில்:
இந்த மனிதர் ரமழான் உறுதிப்பட முன்னர் ரமழானின் முதல் நாள் இரவு தூங்கியுள்ளார். பஜ்ர் உதயமானதன் பின்னர்தான் அன்றைய நாள் ரமழானின் முதல் நாள் என்பதை அறிகின்றார். அது ரமழானின் ஒரு நாள் என்பதை அறிந்துவிட்டதனால் நாளின் மீதி நேரத்தில் நோன்பிருப்பது அவருக்குக் கடமையாகின்றது. பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி அவன் அன்றைய நோன்பைக் கழாச் செய்யவும் வேண்டும். நான் அறிந்த வகையில் இது விடயத்தில் iஷக்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மட்டுமே மாற்றுக் கருத்துக் கொண்டுள்ளார்கள்.
அவர் இது குறித்துக் கூறும் போது,
‘நிய்யத் என்பது அறிவைப் பின்தொடரக் கூடியதாகும். அவர் (ரமழான் வந்துவிட்டதை) அறியாதவர். எனவே, அவர் மன்னிக்கப்படுவார். ரமழான் வந்துவிட்டதை அறிந்த பின்னர் அவர் நிய்யத்தை விட்டுவிடவில்லை. மாறாக, அவர் ரமழான் வந்துவிட்டதை அறியாதவராக இருந்தார். ‘அறியாதவர் மன்னிக்கப்படுவார்;’ என்ற அடிப்படையில் அந்த நாள் ரமழானுடைய நாள் என்பதை அறிந்ததில் இருந்து அவர் நோன்பு நோற்றாரெனில் அவரது நோன்பு சரியானதுதான். இந்த அடிப்படையில் அதை அவர் கழா செய்ய வேண்டியதில்லை’
இருப்பினும், அதிகமான உலமாக்கள் அவர் அறிந்ததிலிருந்து நோன்பையும் நோற்க வேண்டும். அந்த நோன்பைக் கழாவும் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கான காரணத்தை அவர்கள் கூறும் போது,
குறித்த நபர் அந்த நாளின் ஒரு பகுதியை (நோன்பின் சர்த்துக்களில் ஒன்றான) நிய்யத் இல்லாமலேயே கழித்துள்ளார் என்று கூறுகின்றனர். குறித்த அந்த நோன்பைக் கழா செய்வதுதான் பொருத்தமானதாக நான் கருதுகின்றேன்.
(ஷைக் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்)
கேள்வி:
பயணம் செய்யும் ஒருவர் அதிக சிரமத்துடன் நோன்பை நோற்பது பற்றிய சட்டம் என்ன?
பதில்:
அதிக சிரமப்பட்டு ஒருவர் பயணத்தில் நோன்பு நோற்பது ‘மக்ரூஹ்’ ஆகும்.
‘நபி(ச) அவர்கள் தமது ஒரு பயணத்தில் ஒரு மனிதரைச் சூழ மக்கள் ஒன்று கூடியிருந்து அவருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு ‘இது என்ன?’ என்று கேட்டார்கள். ‘இவர் ஒரு நோன்பாளி’ என்று கூறிய போது, ‘ஒரு பயணத்தில் நோன்பு நோற்பதில் நன்மையில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்;துல்லாஹ்
ஆதாரம்: முஸ்லிம்- 2668
இதே வேளை பயணத்தில் நோன்பு நோற்பது மிகவும் கஷ;டமாக இருந்தால் அவர் நோன்பை விடுவது கட்டாயமாகும். ஏனெனில், ஒரு பயணத்தில் நோன்பால் மக்கள் அதிகம் கஷ;டப்படுவதாக நபி(ச) அவர்களிடம் மக்கள் முறையிட்ட போது ‘நோன்பை விடுமாறு கூறினார்கள். அதன் பின்னரும் சிலர் நோன்பு நோற்பதாக அவரிடம் கூறப்பட்ட போது அவர்கள் வரம்பு மீறியவர்கள், அவர்கள் வரம்பு மீறியவர்கள் என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள்.’ (பார்க்க: முஸ்லிம் 2666)
யாருக்குப் பயணம் சிரமமளிக்க வில்லையோ அவர் நபி(ச) அவர்களும் பயணத்தில் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதைப் பின்பற்றி நோன்பு நோற்பது சிறந்ததாகும்.
‘நாம் நபி(ச) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். சூடு அதிகமான ஒரு ரமழானாக அது இருந்தது. எங்களில் நபி(ச) அவர்களையும் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அவர்களையும் தவிர மற்றைய எவரும் நோன்பாளியாக இருக்கவில்லை’ என அபூதர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(அஹ்மத்: 22039 — 21696)
(தொடரும்)
தமிழாக்கம் (அபூ அப்னான்)

கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments