(இந்த ஆக்கம் அஷ்ஷெய்க் கலாநிதி ஹைஸம் ஸர்ஹான் என்பவரின் "பிக்ஹுஸ் ஸவ்ம்" என்ற கையேட்டின் மொழி பெயர்ப்பாகும்)
1- ஸஹர் செய்தல்.
2- ஸஹர் உணவை இறுதி நேரம் வரைப் பிற்படுத்தல்.
3- நோன்பு துறப்பதை அவசரப்படுத்தல்.
4- பேரீச்சம் பழங்களைக் கொண்டு நோன்பு துறத்தல். அவை ஒற்றைப்படையாக இருத்தல். அவை கிடைக்காவிட்டால் தண்ணீர் மிடர்களைக் கொண்டு நோன்பை முடித்தல். எதுவும் கிடைக்காவிட்டால் உள்ளத்தினால் நோன்பு துறப்பதாக எண்ணம் கொள்ளுல்.
5- நோன்பு நோற்றதிலிருந்து நோன்பு துறக்கும் வரையுள்ள நேரத்தில் துஆ கேட்டல்.
6- அதிகமாக தர்மம் செய்தல்.
7- இரவுத் தொழுகையில் கூடுதல் ஈடுபாடு காட்டுதல்.
8- குர்ஆனை ஓதுதல்.
9- உம்றஹ் செய்தல்.
10- எம்மைத் திட்டியவருடன் சண்டை போடாமல் "நான் நோன்பாளி" என்று கூறி விலகிச் செல்லல்.
11- லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வதற்கு முயற்சி செய்தல்.
12- கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருத்தல்.
நோன்பு நோற்றிருக்கும் போது வெறுக்கப்பட்டவை / விரும்பப்படாதவை:
1- உளுவின் போது மிகையாக / ஆழமாக வாய் கொப்பளிப்பதும் நாசிக்குத் தண்ணீர் செலுத்துவதும்.
2- தேவையில்லாமல் உணவை சுவைபார்ப்பது.
நோன்பு நோற்றிருக்கும் போது அனுமதிக்கப்பட்டவை:
1- உமிழ்நீரை விழுங்குதல்.
2- தேவைக்காக உணவின் சுவையை நாவினால் மாத்திரம் சுவைத்தல். அதனை விழுங்கக் கூடாது.
3- குளித்தல்.
4- பல் துலக்குதல்.
5- மனம் பூசுதல்.
6- குளிர் பெற்றுக் கொள்ளல்.
நோன்பின் போது தடுக்கப்பட்டவை:
1- நோன்பு துறக்காமல் இரண்டு நாட்கள் தொடராக நோன்பு நோற்றிருத்தல்.
2- முத்தமிட்ட பிறகு இச்சையை கட்டுப்படுத்தமுடியாமல் நோன்பு முறிந்துவிடும் என்ற அச்சமுள்ளவர் முத்தமிடுதல்.
3- தடைசெய்யப்பட்ட அனைத்து பேச்சுக்களும் செயல்களும்.
4- மடமையாகவும் நிதானமின்றியும் நடந்து கொள்ளல்.
(தொடரும்)
Presented by
Sunnah Academy
South India
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments