
கேப்பைப் புட்டு:-
தேவையானவை :-
கேழ்வரகு - 2 ஆழாக்கு
நாட்டுச் சர்க்கரை /ஜீனி - 1/3 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை.
தண்ணீர் தேவையான அளவு.
நெய் - 2 டீஸ்பூன்/
செய்முறை:-
கேழ்வரகைக் கழுவி நிழற்காய்ச்சலாகக் காயவைத்து மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். தேவையான தண்ணீர் தெளித்து உப்பு தூவிப் பிசறி சலித்து இட்லிச் சட்டியில் துணி விரித்து ஆவியில் வேகவிடவும். 20 நிமிடம் நன்கு வெந்ததும் இறக்கி உதிர்த்து நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல், நெய் சேர்த்துப் பிசறிப் பரிமாறவும்.
தொகுப்பு;தேவிகா சிங்கப்பூர்


0 Comments