
நியூயார்க்கில் கைதுசெய்யப்பட்ட 2 முஸ்லிம் பெண்கள் தொடுத்த வழக்கை முடிவுக்குக்கொண்டுவர நகரம் 17.5 மில்லியன் டாலரை வழங்கவுள்ளது.
அந்தப் பெண்களைப் படமெடுக்க அவர்கள் அணிந்திருந்த முக்காட்டை அகற்றும்படி காவல்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் 2018ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனர்.
ஆண்கள் இருந்த இடத்தில் முக்காட்டைக் கழற்றியபோது சங்கடமாய் இருந்ததாகப் பெண்கள் இருவரும் குறிப்பிட்டனர்.
ஆனால் ஆயிரக்கணக்கான நியூயார்க்வாசிகளுக்கு நீதி கிடைப்பதில் தாங்கள் பங்களித்ததில் பெருமை என்று அந்தப் பெண்களில் ஒருவர் குறிப்பிட்டார்.
முதலில் காவல்துறை அதன் செயலைத் தற்காத்துப் பேசியது.
ஆனால் பிறகு 2020ஆம் ஆண்டில் வழக்கிற்குத் தீர்வுகாணும் நோக்கில் கைதுசெய்யப்படுவோர் அவர்கள் அணிந்திருக்கும் முக்காட்டைக் கழற்றவேண்டிய அவசியமில்லை என்று விதிமுறை மாற்றப்பட்டது.
நேற்று (5 ஏப்ரல்) தாக்கல் செய்யப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கு நீதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும்.
நீதிபதி ஒப்புதல் வழங்கிய பிறகு ஒரு காலக்கெடுவை விதிப்பார்.
அதற்குள் யாரெல்லாம் முக்காட்டைக் கழற்றக் கட்டாயப்படுத்தப்பட்டார்களோ அவர்கள் இழப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதியைப் பெற விண்ணப்பம் செய்யலாம்.
ஏறக்குறைய 4,100 பேருக்கு அந்தத் தொகை பிரித்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதி பெறும் ஒவ்வொருவருக்கும் சுமார் 7,800 டாலர் கிடைக்கக்கூடும்.
seithi

மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments