இந்தியாவில் இந்த இடத்தில்தான் பெண்கள் அதிகம் மது அருந்துகிறார்களாம்!

இந்தியாவில் இந்த இடத்தில்தான் பெண்கள் அதிகம் மது அருந்துகிறார்களாம்!


மது அருந்துவது ஒரு மோசமான போதைப் பழக்கம் என்பது நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் நம் நாட்டில் எந்த மாநில பெண்கள் அதிகமாக மது அருந்துகிறார்கள் தெரியுமா?

இந்தக் காலத்தில் பெண்கள் மது அருந்த மாட்டார்கள் என்பது கட்டுக்கதை ஆகிவிட்டது. ஒவ்வொரு விஷயத்திலும் ஆண்களுக்குப் போட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் பெண்கள், மது அருந்துவதில் கூட ஆண்களுக்குப் பின்தங்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில இடங்களில் பெண்களே அதிகம் மது அருந்துகிறார்கள் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

மத்திய அரசு 2019 முதல் 2022 வரை தேசிய குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வை நடத்தியது. இதில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 16 கோடி பேர் மது அருந்துகிறார்கள். அவர்களில் கோடிக்கணக்கான பெண்களும் உள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், பெரும்பாலான பெண்கள் மதுவை விரும்புவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு 15 வயதுக்கு மேற்பட்ட 24 சதவீத பெண்கள் மது அருந்துகிறார்களாம்.

அருணாச்சல பிரதேசத்திற்கு அடுத்தபடியாக சிக்கிம் மாநிலத்தில்தான் அதிக பெண்கள் மது அருந்துகின்றனர். அந்த மாநிலத்தில் 16 சதவீத பெண்கள் மது அருந்துகிறார்கள். அதேசமயம், நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட 1.03 சதவீத பெண்கள் குடிப்பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதில் 1.6 சதவீதம் பேர் கிராமப்புறங்களிலும், 0.6 சதவீதம் பேர் நகர்ப்புறங்களிலும் உள்ளவர்கள்.

மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை மத்திய அரசு  2019ஆம் ஆண்டிலேயே வெளியிட்டது. நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ரத்னலால் கட்டாரியா, நாட்டில் 1.50 கோடி பெண்கள் மது போதைக்கு அடிமையாக உள்ளனர் என்று கூறினார்.

asianetnews


 



Post a Comment

Previous Post Next Post