கடலூர் அருகே, தொட்டிலில் தூங்கிய 24 நாள் குழந்தையை ஒரு குரங்கு கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது..
கடலூர் அருகில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த விஜய் மற்றும் வினோதினி ஆகிய தம்பதியினருக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 24 நாட்களே ஆன இந்த குழந்தை, தொட்டிலில் தூங்கும் போது, வினோதினி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
திடீரென வந்த குரங்கு ஒன்று, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துக் குதறிவிட்டு தப்பிச்சென்றது. இதனைத் தொடர்ந்து, குழந்தை உயிர் போராடும் நிலையில், அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு 14 தையல்கள் போட்டிருப்பதாகவும், இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியில் குரங்குகள் அதிகமாக சுற்றித்திரிந்து வருவதாகவும், வனத்துறைக்கு தகவல் அளித்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை குரங்குகள் கடித்து தொல்லை படுத்துவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
இந்தியா