4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபர்: சிறையில் நேர்ந்தகதி

4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபர்: சிறையில் நேர்ந்தகதி


வெலிஓயா (Welioya) ஹன்சவில என்ற கிராமத்தில் 4 வயது சிறுமியை தாக்கிய நபர் மீது அநுராதபுரம் சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் காணொளி சாட்சியத்தின் படி குழந்தையை தாக்கிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், விளக்கமறியலில் வைத்து அவரை ஏனைய கைதிகள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

கண்ணாடி கொள்கலனில் வைத்திருந்த சர்க்கரையை சாப்பிட்டதற்காக குறித்த சிறுமி தாக்கப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  

சிறுமியை நபர் கொடூரமாக தாக்குவதை அயல் வீட்டவர்கள் காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ibctamil


 



Post a Comment

Previous Post Next Post