ஈரானிய யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர் கைது…

ஈரானிய யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர் கைது…


கேகாலை, ரம்புக்களை வீதியிலுள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையத்தில் ஈரானிய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கேகாலை ரன்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது ஈரானிய நண்பர்களுடன் குறித்த ஈரானிய யுவதி ஆயுர்வேத மசாஜ் செவய்வதற்காக ரந்தெனியவில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்துக்கு வந்ததாகவும் அங்கு சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்து உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் குறித்த யுவதியை மசாஜ் செய்வதாகக்கூறி பெண்ணை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

24 வயதான ஈரானிய யுவதியே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

lankatruth


 



Post a Comment

Previous Post Next Post