மரக்கறிகளின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, பேலியகொடை மனிங் சந்தையில் ஒரு கிலோ கரட் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ போஞ்சி 500 ரூபாவாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 450 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்தோடு, ஒரு கிலோ தக்களி 400 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 460 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிலோ தேசிக்காய் 1200 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 2700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, நாராஹெக்பிட்டி சந்தையில் ஒரு கிலோ கரட் 480 ரூபாவாகவும், ஒரு கிலோ போஞ்சி 700 ரூபாவாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 680 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்தோடு, ஒரு கிலோ பச்சை மிளகாய் 400 ரூபாவாகவும் ஒரு கிலோ கறி மிளகாய் 600 ரூபாவாகவும் ஒரு கிலோ கத்தரிக்காய் 600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ஒரு கிலோ தேசிக்காய் 1400 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 3700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
lankatruth
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
இலங்கை