தென் கொரியாவுக்கு புதின் எச்சரிக்கை

தென் கொரியாவுக்கு புதின் எச்சரிக்கை


மாஸ்கோ:
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவெடுத்தால் அது தென் கொரியாவின் மிகப் பெரிய தவறாக இருக்கும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், அழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உக்ரைனுக்கு தென் கொரியா விநியோகித்தால், ரஷியா எடுக்கும் முடிவு தென் கொரியாவின் தற்போதைய தலைமைக்கு மிகவும் கசப்பானதாக இருக்கும்.

தற்போது உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வரும் நாடுகள் அனைத்தும் எங்களுடன் நேரடியாகப் போரிடவில்லை என்று நம்புகின்றன.

அப்படியென்றால், வட கொரியா உள்ளிட்ட அந்த நாடுகளின் எதிரிகளுக்கு அதே போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்களை அளிக்கும் உரிமை எங்களுக்கும் உள்ளது என்றார் அவர்.

nambikkai


 



Post a Comment

Previous Post Next Post