துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான பாடகி சுஜீவாவின் தற்போதைய நிலை

துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான பாடகி சுஜீவாவின் தற்போதைய நிலை


அதுருகிரியவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாடகி கே. சுஜீவாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

அத்துருகிரிய (Athurugiriya) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு வந்த துப்பாக்கிதாரிகள் தப்பிச் செல்ல பயன்படுத்திய வாகனம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (08) மாலை 6.15 மணியளவில் 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த வான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலத்சிங்கள - அயகம, தெல்மெல்ல பிரதேசத்தில் பாழடைந்த காணி ஒன்றில் இருந்து குறித்த வான் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வான் முன் மற்றும் பின் இலக்கத் தகடுகள் இல்லை எனவும், வருமான அனுமதிப் பத்திரத்தின் பிரதி ஒன்றும் முன் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (08) காலை 10 மணியளவில் அதுருகிரிய நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அழகுக்கலை நிலையம் திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் 38 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகி கே.சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ibctamil




 



Post a Comment

Previous Post Next Post