இலங்கையில் ஏற்படப்போகும் இரத்தக்களரி: முன்னாள் அதிபர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இலங்கையில் ஏற்படப்போகும் இரத்தக்களரி: முன்னாள் அதிபர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை


தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படலாம் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் எனவும் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முடியாது எனவும் முன்னாள் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் ஆயிரக் கணக்கானோரின் இரத்தக்களரி ஏற்படலாம் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ibctamil


 



Post a Comment

Previous Post Next Post