அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று தற்போதைய அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிடவிருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான நேரடி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறியதால் போட்டியிலிருந்து விலகக் கூடும் என்ற தகவல்கள் வெளியானநிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். நவம்பரில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப்போவது நான்தான். அந்தப் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை; நானும் விலகப் போவதில்லை.
இந்தத் தேர்தலில் நான் இறுதிவரை நின்று களம் காண்பேன். நாம் அனைவரும் இணைந்து வெற்றியும் பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்