6 வருட சிறைவாசத்துக்கு பின் காலிதா விடுதலை

6 வருட சிறைவாசத்துக்கு பின் காலிதா விடுதலை


பங்களாதேஷின் ஏதிர்க்கட்சி தலைவியாக இருந்த 78 வயதான கலிதா ஸியா தற்பொழுது சிறையில் இருக்கிறார் காலிதா ஸியாவை ஊழல் வழக்கொன்றில் 17 வருட சிறைத்தண்டனை விதித்து 2018ல் சிறையில் அடைத்தார் பிரதமர் ஷேக் ஹஸீனா.

1977 முதல் 1981 வரை பங்களாதேஷின் ஜனாதிபதியாக இருந்த காலிதா ஸியாவின் கணவர் ஸியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பின்னர் காலிதா ஸியாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது.

1978 இல் பங்களாதேஷ் தேசிய வாதக் கட்சியை நிறுவினார். அதனூடாக அவர் 1991 இல் பங்களாதேஷின் முதல் பெண் பிரதமரானார்.

1991-1996 மற்றும் 2001-2006 வரை பங்களாதேஷ் பிரதமராக பதவி வகித்தார். உலகின் #முதலாவது முஸ்லிம் பெண் பிரதமர் - பேகம் காலிதா ஸியா என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் இருக்கும் அவரை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி சஹாப்தீன் அதிகாரிகளை பணித்துள்ளார்.

tamilmirror



 



Post a Comment

Previous Post Next Post