எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தங்களது பூரணை ஆதரவை வழங்க உள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி சதீக் (முப்தி) தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் நாடு பொருளாதார வீழ்ச்சி அடைந்த காலகட்டத்தில் எதிர் கட்சி தலைவராக இருக்கின்ற சஜித் பிரேமதாச அவர்களோ அல்லது தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்களோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களோ கட்டி எழுப்ப முன் வரவில்லை, தனிமனிதனாக நின்று நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்ற தூர நோக்குடன் பொறுப்பெடுத்த மாமனிதர் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க அவர்கள் மாத்திரம் தான் என்பதை யாவரும் அறிந்த விடயமாகும்.
மேலும் குறுகிய காலத்தில் நாட்டை பொறுப்பெடுத்து நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார வீழ்ச்சியை உடனடியாக நிவர்த்தி செய்து பெட்ரோல் வரிசை பால் மா வரிசை மற்றும் உணவு தட்டுப்பாடு போன்ற அனைத்தையும் நிவர்த்தி செய்து சில பொருட்கள் தடை செய்யப்பட்டிருந்தது, அனைத்து ஏற்றுமதி இறக்குமதி தடைகளை நீக்கி வட கிழக்கில் உள்ள காணி பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுத்து அதேபோன்று வறுமைக் கோட்டில் உள்ள தரம் ஒன்று 12 வரையிலான பாடசாலை மாணவச் செல்வங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமை பரிசில் வழங்கும் திட்டத்தை வழங்கி நாட்டை ஒரு நடுநிலைமையான அளவுக்கு கொண்டு வந்த எமது கௌரவ ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்களுக்கு எமது ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி பூரண ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது என்றும் தமிழ் சமூகம் மற்றும் முஸ்லிம் சமூகம் அனைவரும் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற தங்களது பூரண ஆதரவுகளை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி சதீக் (முப்தி) தெரிவித்தார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
இலங்கை