பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை இராஜினமா செய்து , நாட்டை விட்டு வெளியேறினார், அவர் மீண்டும் அரசியலுக்கு வர மாட்டார் என அவரது மகனும், முன்னாள் தலைமை ஆலோசகருமான சஜீப் வசேத் ஜாய் உலகளாவிய ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டை மாற்றுவதில் அவர் முயற்சித்த போதும், அவரது அரசாங்கத்திற்கு எதிரான வலுவான பொதுமக்கள் போராட்டம் ஏற்பட்டதால் அவர், பதவியை விட்டு விலக தீர்மானித்தார்."
அவர் பங்களாதேஷில் ஆட்சிக்கு வந்து போது அது ஒரு தோல்வியடைந்த நாடாக கருதப்பட்டது எனினும், இன்று ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
கடந்த மாதத்தில், பங்களாதேஷில் 300இற்கும் மேற்பட்டோர் வன்முறைப் போராட்டங்களால் இறந்தனர். அத்துடன் இந்த போராட்டம் தொடங்கப்பட்டாலும், சிறிது காலத்தில் பிரதமர் பதவி விலகுவதற்கான கோரிக்கையாக மாறியது.
ஷேக் ஹசீனாவின் விமர்சகர்கள் அவர் ஊழல் மற்றும் சொந்த பந்தம் மட்டுமல்ல, உயர்நிலை மற்றும் சிவில் உரிமைகளைக் குறைப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இவை, அவர் கொண்டு வந்த பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்குள் மறைந்துவிட்டதாக பலர் குற்றம் சாட்டினர்.
இந்தநிலையில், எதிர்ப்பாளர்களைக் கையாள்வதில் அரசாங்கம் கடுமையாக நடந்துகொண்டுள்ளது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்