இஸ்ரேலின் இராணுவ தளங்களை குறிவைத்து, ஹிஸ்புல்லா அமைப்பு ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் இஸ்ரேலின் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு மூத்த இராணுவ தளபதி கொல்லப்பட்டற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் லெபனான் எல்லையில் உள்ள ஜெனின் பகுதியில் தீவிர தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்து, 71 பேர் காயமடைந்ததாக காசாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர் பதவியாளர் வோல்கர் டர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை முதல்வர் ஜோசப் பொரெல் ஆகியோர், மத்திய கிழக்கில் காசா போர் பரவும் அபாயத்தை கருத்தில் கொண்டு, தீவிர நிலையை தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்