Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேச எதிர்க்கட்சி கோரிக்கை..!


வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில் அவரை நாடு கடத்துங்கள் என வங்கதேச முக்கிய எதிர்க்கட்சி இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்தில் மாணவர்கள் இட ஒதுக்கீடு போராட்டம் நடந்த நிலையில் அது வன்முறையாக மாறியதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

அவர் மீது கொலை வழக்கு உள்பட சில வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷேக்  ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சி பிஎன்பி இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஷேக் ஹசீனாவை வங்கதேச அரசிடம் சட்டபூர்வமாக இந்தியா ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள இருப்பதால் இந்தியா அதற்கு உதவ வேண்டும் என்றும் பிஎன்பி கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
வங்கதேசத்தின் சுதந்திரத்தை பலவீனப்படுத்தியது, கடந்த 15 ஆண்டுகளாக நாட்டின் முன்னேற்றத்தை தடுத்தது, அவருடைய தவறான அரசியலால் கடன் சுமை அதிகமானது ஆகியவை அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்றும் இதற்கு அவர் மக்கள் முன் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

webdunia


 Ai SONGS

 



Post a Comment

0 Comments