சூடு பிடிக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தல்:ஆரம்பமானது கட்சி தாவல்

சூடு பிடிக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தல்:ஆரம்பமானது கட்சி தாவல்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு அளித்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பகா, அநுராதபுரம், மாத்தறை, காலி ஆகிய மாவட்டங்களின் தலைவர்கள் பதவிகளை வகித்த மூன்று அமைச்சர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக நான்கு புதிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் மாவட்ட தலைவராக செயற்பட்ட எஸ்.எம். சந்திரசேனவின் பதவிக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை நியமித்துள்ளனர்.

கம்பகா மாவட்ட தலைவராக இருந்த பிரசன்ன ரணதுங்கவின் பதவிக்கு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவை மற்றும் கஞ்சன விஜேசேகரவின் பதவிக்கு மாத்தறை மாவட்ட தலைவராக நிபுன ரணவக்கவை நியமித்துள்ளனர்.

காலி மாவட்ட தலைவராக கடமையாற்றிய ரமேஷ் பத்திரனவின் பதவிக்கு இராஜாங்க அமைச்சர் மொகான் பிரியதர்ஷன டி சில்வாவை நியமித்துள்ளனர்.



 



Post a Comment

Previous Post Next Post