Ticker

6/recent/ticker-posts

தெதிகம தேர்தல் தொகுதி.;2024 பாராளுமன்றத் தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புகாரி சரீப்


ஏன் புகாரி சரீப் பாராளுமன்றம் செல்ல வேண்டும்.?

வரலாற்றில் முக்கியமானதோர் இடம் தான் தெதிகம தேர்தல் தொகுதி. 

இம்மண்ணில் அறிவாளிகள், தொழில் அதிபர்கள், சுயதொழில் செய்வோர், அரச ஊழியர்கள் என பலரும் இருக்கின்றனர். 

ஆனால் தெதிகமை மண்ணிலிருந்து தெதிகமை மைந்தரொருவர் பாராளுமன்றம் செல்ல வேண்டுமானால் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமே. 

தெதிகமைத் தேர்தல் தொகுதியில் உள்ள சிறுபான்மையினச் சகோதர சகோதரிகள் சிந்தித்து செயலாற்றுவதன் மூலம் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

பெரும்பான்மைச் சமூகத்தில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள புகாரி சரீப் சிறுபான்மைச் சமூகத்தாலும் தெரிவு செய்யப்பட வேண்டிய ஒருவரே. 
எனவே கேஸ் சிலிண்டர் சின்னத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தலில் புகாரி சரீபின் கைகளைப் பலப்படுத்தி வெற்றிபெறச் செய்வோம்.


2024 பாராளுமன்ற தேர்தல் கேகாலை மாவட்டம் (Warakapola) 

யார் இந்த புகாரி ஷரீஃப்

இவர் 2024  பாராளுமன்ற வேட்பாளர்

வரகாபோல பிரதேச பாரம்பரிய  அரசியல்வாதி 

30 வருட அரசியல் அனுபவம்  உள்ளவர்

பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பவர்

கட்சித் தலைமை ,பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாண ஆளுநர்கழுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்.

பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் வெளிநாட்டு தூதுவர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்.

பிரதேச மற்றும் மாவட்ட மாகாண கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சி உறுப்பினர்களுடன் ஒத்துழைத்து பிரதேசத்தின் அபிவிருத்திக்காக உழைத்தவர்.

30 வருட அரசியலில் பல கட்சிகளால் அழைப்பு  விடுக்கப் பட்டும் எந்த சந்தர்ப்பத்திலும் கட்சி தாவாமல் ஒரே கொள்கையில் இருந்தவர்.

பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், பள்ளிவாசல்கள், கிராமங்கள் அனைத்தினதும் அபிவிருத்திக்காக அயராது உழைத்தவர்.

காலநேரம் பாராது முஸ்லிம் ஜனாஸாக்களை சிரமம் இன்றி பெற்றுக் கொடுத்தவர்.

யார் வேண்டுமானாலும் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பிரச்சனைகளை முன்வைத்து தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்.

மாவட்டத்தில் யாவரும் நன்கு அறிந்தவர்.

தெரியாதவர்களின் வாக்குறுதிகளை நம்பி நன்கு அறிந்தவரும் தெரிந்தவருமான ஒருவரை ஆதரிக்காமல் விலகிச் செல்வது
அவருடைய தோல்வி அல்ல,சமூகத்தின் தோல்வி என்று நினைக்கின்றேன்.


தகவல்:
சமூக நலன் விரும்பி 
பிரபல அறிவிப்பாளர்
R Mohamed Rafee



 Ai SONGS

 



Post a Comment

0 Comments