ராஜகுமாரியின் சுயம்வரம்-53

ராஜகுமாரியின் சுயம்வரம்-53


பணிப்பெண் இருவருக்கும் முகமே மாறிப்போச்சு.காரணம் இரவுக்கு தூக்கமே இல்லையே என்னும் கவலை தான். என்னதான் ராஜகுமாரிமேல் பாசம் இருந்தாலும் தூக்கம் பசி பொறுப்பது கடினம் தானே.அவர்கள் இருவரும் பேசி முடிவு எடுத்து விட்டு காவலரிடம் கூறினார்கள் "நாளைய தினம் வேறு இருவரை நியமிக்கப் பரிந்துரை 
செய்யுமாறு மந்திரியிடம் கூறுங்கள்" என்று பணிவோடு கேட்டுக் கொண்டார்காள். 

அவனும் சரியெனக் கூறிவிட்டு  சென்றான்  .

சிறுது நேரத்தில்  வேறு இரு காவலர்களோடு வந்து நின்றான் மீனாவைப் பார்த்துத் "தாங்கள் கூறியதை மந்திரியிடம் உரைத்ததாகவும் நாளை காலை முதல் வாணி ராணி இருவரையும் அனுப்பி விடுவதாகவும் இவர்கள் இருவரையும் இரு நாள் விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்புவதாகவும்" கூறி முடித்தான்.

 "ஆஹா அருமை சகோதரன்  நன்றிகள்" என்றார்கள் மீனா பானு இருவரும்.

அதோடு நிறுத்தாமல் மீண்டும் கூறினான் "இவர்கள் இருவரும் புதியவர்கள்  இவர்களின் பெயர் சகாதேவன் மாகாதேவன்  இன்று இரவு உங்களுக்குத் துணையாய் இருப்பார்கள். நீங்கள் நம் சட்டங்கள் பற்றியும் இவர்களுக்குக் கூறலாம்.அறியாத விடையங்களைக் கேளுங்கள்" என அவர்களை நோக்கிக் கூறி விரைந்தான். 

"தோழியரே நீங்க எங்களைப் பெயர் கூறியே அழைத்திடலாம்" என்றான் சகாதேவன். 

உடனே "ஆமா ஆமாந் தோழி என்னையும்" என்றான் மகாதேவன்.
இதில் இருந்து புரிந்தது மகாதேவன் கொஞ்சம் வெகுளி என்பது.

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post