“திருப்பதி லட்டு குறித்து சந்திரபாபுநாயுடு பொதுவெளியில் கூறியிருக்க கூடாது” - உச்சநீதிமன்றம் காட்டம்!

“திருப்பதி லட்டு குறித்து சந்திரபாபுநாயுடு பொதுவெளியில் கூறியிருக்க கூடாது” - உச்சநீதிமன்றம் காட்டம்!

கடவுள் விவகாரத்தில் அரசியலை தள்ளி வைக்க வேண்டும் என அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், எந்த ஆதாரமும் இன்றி திருப்பதி லட்டு குறித்து சந்திரபாபு நாயுடு பொதுவெளியில் புகார் கூறியது தேவையில்லாதது என கருத்து தெரிவித்துள்ளது.

திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் விலங்கின் கொழுப்பு கண்டறியப்பட்ட சர்ச்சை தொடர்பாக, சுப்பிரமணியன் சாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருப்பதி லட்டில் விலங்கின கொழுப்பு கலக்கப்பட்ட புகாரை, உயர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் கூறுவது மத நல்லிணக்கத்தை கெடுக்கும் செயல் என்று சுப்பிரமணியன் சாமி குற்றம் சாட்டினார். அதற்கு, எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர பிரதேச அரசு, திருப்பதி தேவஸ்தானம் சார்பாக சுப்பிரமணியன் சாமி எப்படி மனு தாக்கல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடவுள் விவகாரத்தில் அரசியலை தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், கலப்பட நெய் தான் பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், சிறப்பு விசாரணை குழுவின் முடிவு வரும் வரை பொறுமை காக்காமல், அவசரமாக பொதுவெளியில், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்தது ஏன் என்று வினவினார்.

சோயா பீன்ஸ் அல்லது தேங்காய் எண்ணெய்யாக கூட இருக்கலாம் என அறிக்கையில் கூறும் நிலையில், அது மீன் எண்ணெய் என்ற முடிவுக்கு வர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், இவ்வழக்கு விசாரணையை அக்டோபர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

news18



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post