இஸ்ரேல் பேருந்து நிலையத்தில் துப்பாக்கி சூடு : பலர் காயம்

இஸ்ரேல் பேருந்து நிலையத்தில் துப்பாக்கி சூடு : பலர் காயம்

இஸ்ரேலில்(israel) பேருந்து நிலையமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளதுடன் 25 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு மணி நேரத்தில் தெற்கு இஸ்ரேலில் உள்ள பீர்ஷேபாவில் "சந்தேகத்திற்கிடமான பயங்கரவாத தாக்குதல்" நடத்தப்பட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல கடைகள் மற்றும் உணவகங்களைக் கொண்ட பீர்ஷேபாவின் மத்திய பேருந்து நிலைய முனையத்தில் உள்ள மெக்டொனால்டுக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேலின் அம்புலன்ஸ் சேவை,தாக்குதலில் காயமடைந் பத்து பேருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர்களில் சிலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டது.

தாக்குதல் நடத்தியவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதல் தொடங்கிய உடனேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை நேற்று இரவு , வடக்கு இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட சுமார் 30 ரொக்கெட்டுகளை தடுத்து நிறுத்தியதாக இஸ்ரேல் படை வட்டாரங்கள் (IDF) தெரிவித்துள்ளன.

ibctamil



 



Post a Comment

Previous Post Next Post