சைக்கிளில் வந்து பிரதமருக்கு மனு கொடுத்த மாணவி

சைக்கிளில் வந்து பிரதமருக்கு மனு கொடுத்த மாணவி

பாத்திமா நடா என்ற 14 வயது மாணவி பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் (Harini Amarasuriya) மனு ஒன்றை கையளித்துள்ளார்.

இவர் நேற்று (14) பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமரை சந்தித்து மனு ஒப்படைத்துள்ளார்.

குறித்த மாணவி, காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு (Colombo) சைக்கிளில் பயணித்து பிரதமர் அலுவலகத்தில் சென்றே இந்த மனுவை வழங்கியுள்ளார்.

பிரதமரை சந்தித்த மாணவி

சிறுவர் மற்றும் இளைஞர் பரம்பரையை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராகவும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறும் கோரி மாணவி இந்த மனுவை கையளித்துள்ளார்.

இதனை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ibctamil



 



Post a Comment

Previous Post Next Post