பிரிட்டனில் கார்டிப் நகரில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டில் திருடுவதற்காக டாமியன் வோஜ்னிலோவிச் என்ற திருடன் உள்ளே நுழைந்துள்ளான்.
இந்நிலையில், பெண் வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து நுழைந்த டாமியன், வீட்டில் சேர்ந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, சமையலறை, கழிவறையில் உள்ள பொருட்களைச் சீராக அடுக்கி வைத்து, கடையில் வாங்கி வைத்திருந்த பலசரக்கு பொருட்களைக் குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்து கூண்டில் உள்ள பறவைகளுக்கு உணவளித்து, வீட்டைத் துடைத்து, சமையல் செய்து, துணிகளைத் துவைத்து அதைக் காயப்போட்டு விட்டுச் சென்றுள்ளார்.
வீட்டை விட்டு வரும்போது, ‘டோன்ட் வொரி, பி ஹாப்பி, நன்றாக சாப்பிடுங்கள்’ என்று எழுதி வைத்துவிட்டும் வந்துள்ளார்.
வீட்டில் வசித்து வந்த அந்தப்பெண் திரும்பி வைத்தும் இதைப் பார்த்து அதிர்ந்துபோனார்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தபின், திருடனின் வினோத செய்கையால் பயந்து தனது வீட்டில் வசிக்காமல் தோழி வீட்டில் தங்கியுள்ளார்.
டாமியன் வோஜ்னிலோவிச் மற்றொரு வீட்டில் திருடும்போது டாமியன் பிடிபட்டுள்ளார். இதுதொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்