அநுர அரசால் மீண்டும் பாதுகாப்பு துறைக்கு ஷானி அபேசேகர

அநுர அரசால் மீண்டும் பாதுகாப்பு துறைக்கு ஷானி அபேசேகர

முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை (Shani Abeysekara) மீண்டும் காவல்துறை சேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க காவல்துறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் படி, ஷானி அபேசேகர, இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு வருட காலத்திற்கு சேவையாற்றவுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற பல சர்ச்சைக்குரிய குற்றங்களுக்குப் பொறுப்பாக இருந்த விசாரணை அதிகாரியாக இவர் கடமையாற்றியுள்ளார்.

கொலைகளின் விசாரணை

பிரபல துப்பறியும் நபரான ஷானி அபேசேகர, குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை, கொழும்பை சுற்றி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு போன்ற விசாரணைகள் ஷானி அபேசேகரவின் மேற்பார்வையில் இடம்பெற்றன.

அந்த சம்பவங்களுக்கு மேலதிகமாக, ஷானி அபேசேகர, ரோயல் பார்க் கொலை, அங்குலான இரட்டைக் கொலை, உடதலவின்ன கொலை, மொஹமட் சியாம் கொலை போன்ற பல சர்ச்சைக்குரிய கொலைகளின் விசாரணையில் ஈடுபட்ட அதிகாரியாகவும் அறியப்படுகிறார்.

ibctamil



 



Post a Comment

Previous Post Next Post