Ticker

6/recent/ticker-posts

ஆண்களுக்கு 2 திருமணம் கட்டாயம்..இல்லையென்றால் சிறை தான் - எங்க தெரியுமா?


எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை திருமணம் செய்வது கட்டாயம் என அந்நாடு தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் எத்தனையோ விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. அந்த வகையில், மத்திய ஆப்பிரிக்காவில் நடக்கும் இந்த நிகழ்வும் அதற்கான காரணங்களும் விசித்திரம்தான். மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடு எரித்திரியா.

இங்கு அண்டை நாடுகளின் போர் நடந்து வருகிறது. இதனால் அந்த நாட்டில் உள்ள ஆண்கள் உயிரிழந்து வருகின்றனர் . தொடர்ந்து அடிக்கடி போர்களைச் சந்தித்து வருவதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துவிட்டது.

தற்போதைய சூழலில் ஆண்களின் எண்ணிக்கையை விடப் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.இதனால் பெண்களுக்குத் திருமணம் செய்வதற்கு போதிய ஆண்கள் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு எரித்திரியா நாட்டில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எரித்திரியாஆண்கள் இரு மனைவிகளையும் சமமாக நடத்த வேண்டும். இரண்டு மனைவிகள் சட்டத்தைப் பின்பற்றத் தவறினால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மனைவி தனது கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.

இல்லை எனில் அவளும் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் .பெண்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு எரித்திரியா நாட்டில் ஆண்களுக்குப் பலதார மனத்தை அனுமதிக்கிறது 

ibctamilnadu



 Ai SONGS

 



Post a Comment

0 Comments