Ticker

6/recent/ticker-posts

வீட்டில் வேலை செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்! ஓவர் நைட்டில் கோடீஸ்வரரான நபர்!

அதிர்ஷ்டம் இருந்தால் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரராகலாம். இந்தோனேசியாவில் வசிக்கும் ஒருவருக்கும் அப்படித்தான் நடந்தது. ஜோசுவா ஹுடகாலுங் என்ற நபர் தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு ஜாக்பாட் அடித்தது. இதன் மூலம் ஒரே இரவில் அவர் கோடீஸ்வரரானார். ஜோசுவார் ஒரு நாள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென பலத்த சத்தம் கேட்டு அறைக்கு ஓடி வந்து பார்த்தபோது பெரிய கல் விழுந்து கிடப்பதை பார்த்தார்.

அந்தக் கல்லைப் பார்த்த ஜோஷ்வா ஆச்சரியப்பட்டார். உண்மையில், அது ஒரு சாதாரண கல் அல்ல, ஒரு விண்கல். இந்த விண்கல் தான் அவரின் வாழ்க்கையை மாற்றியது. அவர் அந்த கல்லை 1.4 மில்லியன் பவுண்டுகளுக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ. 14 கோடிக்கு விற்றார்.

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் கோலாங் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது..  இவ்வளவு விலைக்கு விற்ற இந்தக் கல்லின் சிறப்பு என்னவென்று நீங்கள் நினைக்கலாம். ஜோஷ்வாவின் வீட்டில் விழுந்த விண்கல் 2.1 கிலோ எடையுள்ள பல வழிகளில் தனித்துவமான, மிகவும் அரிய கல்லாகும். இது 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விண்வெளி அடிப்படையிலான நிறுவனம் இது மிகவும் அரிதான CM1/2 கார்பனேசியஸ் காண்ட்ரைட் என்று கருதியது. 85 சதவீத விண்கற்கள் இந்த பொருளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த CM1/2 ஒரு அரிய கலவையாகும்.

asianetnews



 Ai SONGS

 



Post a Comment

0 Comments