Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-76


385. வினா: தலைமையிடம் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும்?
விடை: தீக்காய்பவர் போல

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.(691)

386.வினா:தெய்வத்தோடு ஒப்ப கொளல் யாரை?
விடை:பிறர் மனக்குறிப்பைத் தானாக அறிபவரை

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல், (702) 

387. வினா :நெஞ்சம் கடுத்தது காட்டுவது எது? 
விடை: முகம் 

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்.  (706)  

388 வினா : அறிவிலார் முன் நாம் எப்படி இருத்தல் வேண்டும்?
விடை: ஒன்றுமறியாத சுண்ணாம்பு போல இருத்தல் வேண்டும் 

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். ( 714 ) 

389. வினா : நன்று என்றவற்றுள்ளும் நன்றே - எது? 
விடை : எதையும் முந்திக்கொண்டு பேசாத பண்பு 

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு.( 715 ) 

(தொடரும்)




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments