
425. வினா : யார் பகை கூடாது?
விடை : சொல் திறம் மிக்கவர்களின் பகை
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை. (872)
426. வினா : உட்பகைக்கு ஆளான குடி என்னவாகும்?
விடை: அரத்தால் தேய்ந்த பொன்போல வலிமை
குறையும்
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி. (888 )
427. வினா : பாம்புடன் வாழ்வது போன்றது எது?
விடை : உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழ்வது
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று. (890 )
428. வினா : பெண்ணே பெருமை உடையவள் எப்போது?
விடை: பெண் ஏவல் செய்தொழுகும் ஆண்மையைக் காணும்போது
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து.(907)
429. வினா : தூண்டிலில் சிக்கிய மீன் போன்ற நிலை எது?
விடை: சூதாட்டம் மூலம் பெறும் வெற்றி
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று. (931)
(தொடரும்)
கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments