Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-86


435. வினா : உயிருக்குத் துன்பம் இல்லை எப்போது? 
விடை: தனக்கு ஒவ்வாததைத் தவிர்த்து அளவுடன் உண்டால் 

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் 
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.(945) 

436. வினா : தலையின் இழிந்த மயிரனையர் யார்? 
விடை: ஒழுக்க நெறியில் தவறுபவரே 

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் 
நிலையின் இழிந்தக் கடை.(964)

437. வினா : மலை போல் உயர்ந்தவரும் இழிந்தவரே எப்போது? 
விடை: குன்றிமணி அளவு இழிசெயல் செய்தாலும் 

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ 
குன்றி அனைய செயின்.(965) 

438. வினா : கவரி - மா(ன்) இனத்தைச் சார்ந்தவர் யார்? 
விடை : மானம் இழந்து வாழாதவர் 

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்.(969) 

439. வினா : எல்லா உயிர்களுக்கும் பொதுவானது எது? 
விடை : பிறப்பு 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.(972)

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments