
நினைக்கிறார்கள். அதனால்தான் தயக்கமில்லாமல் நிறைய சாப்பிடுகிறார்கள். வாழ்க்கை முறையும் மகிழ்ச்சிக்காகவே உருவாக்கப்பட்டாலும், நமது தவறான உணவுப் பழக்கவழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் ஏற்படும் சில பிரச்சனைகளால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் போது, நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கொஞ்சம் சிந்திக்கத் தொடங்கி விடுகின்றோம்.
பெரும்பாலானோர் கவனக்குறைவு மற்றும் மோசமான உணவுப் பழக்கத்தால் பாதிக்கப்படும் கல்லீரலில் கொழுப்பு சேர்வதைப் பற்றி உடலில் ஏதாவதொரு மாற்றம் ஏற்படுகின்றபோதே யோசிக்க தொடங்கி விடுகின்றனர். கல்லீரல் தொடர்பான நோய்கள், வயது வித்தியாசமின்றி பலரையும் அவதிப்படுத்தி வருகின்றது.
கல்லீரல் நமது உடலில் இரண்டாவது முக்கிய உறுப்பு. இதன் பங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நொதி உற்பத்தி, உணவு செரிமானத்திற்குத் தேவையான பித்த உற்பத்தி, உடலின் நச்சு நீக்கம், இரத்த அணுக்கள், சில சமயங்களில் இரத்த உற்பத்தி என பல பாத்திரங்களை கல்லீரல் செய்கிறது. எனவே, கல்லீரல் நோய் நம் உடலுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது.
கல்லீரலில் கொழுப்பு படிதல்
கல்லீரல் கொழுப்பு என்பது இன்று ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. பொதுவாக, கல்லீரலில் சில அளவு கொழுப்பு உள்ளது. ஆனால் கல்லீரலில் இருக்க வேண்டிய எண்ணெயை விட கொழுப்பு அளவு அதிகமாக இருந்தால் அது ஒரு நோய். சாதாரண சந்தர்ப்பங்களில், கொழுப்பு படிதல் 5% ஆகும், ஆனால் நோய் ஏற்பட்டால், அது 40% ஆக அதிகரிக்கிறது, ஒரு சாதாரண நபரின் கல்லீரலில் 30% க்கும் குறைவாக இருக்க வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் கொழுப்பு 30% க்கு அருகிலிருந்தால், அதை ஒரு எச்சரிக்கையாக குறிப்பிடலாம்.

கொழுப்பு கல்லீரல் நோயால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றுள், 'சிரோசிஸ்' முக்கியமான ஒன்றாகும். மது அருந்தாத ஒருவருக்குக் கல்லீரலில் கொழுப்பு படிவதால் சிரோசிஸ் ஏற்படுகின்றது.
கொழுப்பு மற்றும் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக உண்ணுவதால் கல்லீரலில் கொழுப்பு படியலாம். அதிகப்படியான மதுபானப் பயன்பாடு, உடற்பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மரபணுப் பிரச்சனைகள், உடல் கழிவுகள் சரியாக வெளியேற்றப்படாமல் உடலில் தேங்குவது, மன அழுத்தம், ஸ்டெராய்டு போன்ற மருந்துகளை அதிகம் உட்கொள்வது, சரியாக அளவில் தண்ணீர் குடிக்காமை, பட்டினி கிடத்தல், வலி நிவாரணிகளை அடிக்கடி பயன்படுத்துதல் போன்ற இன்ன பல காரணங்களால் இந்நோய் ஊக்குவிக்கப்படலாம்.
இந்த நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை அடையாளம் காண்பது மிகவும் கடினம். 40% முதல் 50% கொழுப்பு கல்லீரலில் படிந்த பிறகே அறிகுறிகள் தோன்றலாம். சாதாரண ஒரு மனிதனின் கல்லீரலில் 5% கொழுப்பு படிந்திருக்கும். 30% கொழுப்புப் படிவு இந்நோய்க்கான கவனிக்கத்தக்க அறிகுறியாகும்.
கல்லீரல் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தால் பசியின்மை, வயிற்று வலி, மலச்சிக்கல், நோய்வாய்ப்பட்ட கல்லீரல் வீக்கத்தால் வயிற்று வீக்கம், அடிவயிற்றின் வலது பக்கத்தில் நிலையான விறைப்பு மற்றும் வலி, அஜீரணம், குமட்டல், வாந்தி, சோம்பல், கணுக்கால் வீக்கம், அரிப்பு, தொடர்ச்சியான வாந்தி, வெற்று நிற சிறுநீர், மலம் மஞ்சள் மற்றும் லேசான தலைவலி போன்ற அறிகுறிகளைக் காணலாம்.
இந்த நிலைமைகள் மிகவும் தீவிரமடைவதால் பாலின இயலாமை ஏற்பட்டு பெண்களின் மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும். கல்லீரலில் ஹார்மோன்களின் உற்பத்தி குறைவதே இதற்குக் காரணம். இதன் காரணமாக, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிக்கிறது. ஆனால், இந்த அறிகுறிகள் எதுவும் காட்டப்படாவிட்டாலும் கல்லீரல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த அறிகுறிகள் காணப்பட்டால், இதனைக் கண்டறிய முறையான பரிசோதனையை நீங்கள் செய்ய வேண்டும்.
அந்த சோதனை 'கல்லீரல் செயல்பாடு சோதனை' என்று அழைக்கப்படுகிறது. அதைச் செய்வதன் மூலம், கல்லீரலில் உற்பத்தியாகும் நொதிகளைக் கணக்கிட்டு, அதன் மூலம் நோயாளி, 'கொழுப்பு கல்லீரல் நோயாளியா, இல்லையா?' என்பதைக் கண்டறிய முடியும்.
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments