
சேப்பாக்த்தில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து பின்தங்கி உள்ளது. அபாரமாக விளையாடிய கேகேஆர் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோனி கேப்டன்ஷப்பில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும் என சேப்பாக்கத்தில் குவித்த ரசிகர்களுக்கு கடைசி வரை ஏமாற்றமே மிச்சம்.
சேப்பாகத்தில் நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.சிஎஸ்கே அணியில் ருத்துராஜ்க்கு பதிலாக திரிபாதியும் முகேஷ் சவுதிரி பதிலாக அன்சுல் கம்போஜ் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
சிஎஸ்கேவின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா - டெவான் கன்வே களமிறங்கினர். கம்பேக் கொடுக்கும் என்று நினைத்த சிஎஸ்கே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து அதிர்ச்சி கொடுத்தது. 72 ரன்களுக்கு சிஎஸ்கே 7 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில் 9 ஆவது வீரராக மைதானத்திற்குள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வீறுநடை போட்டு வந்தார்.
தோனி ஒன்று அல்லது இரண்டு பவுண்டரிகளையாவது அடித்து ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் 4 பந்துகளில் 1 ரன் மட்டும் சுனில் நரைன் பந்துவீச்சில் அவுட்டாகி வந்த வேகத்தில் மீண்டும் பெவிலியன் திரும்பினார் தோனி. இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்தை 103 ரன்களை போராடி எடுத்தது.
இதையடுத்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கு உடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சிஎஸ்கே பவுலர்கள் எந்த சிரமும் கொடுக்கவில்லை. சேப்பாக்கம் மைதானத்தில் கூலாக விளையாடிய கேகேஆர் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 10.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சிஎஸ்கே அணி 5 தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது இதுவே முதன்முறையாகும். மேலும் சேப்பாக்கத்தில் முதன்முறையாக தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments