Ticker

6/recent/ticker-posts

Ad Code



அமாவாசை!


அழகு மலர்கள் 
பூத்துக் கிடக்கும்
அகன்ற வானிலே
அழகுக்கே இலக்கணமான 
பூரணமான அழகே!
நின் அழகு ஒளியின்றி 
இன்று மருகுகிறேன்!
என்று உன் திருமுகம் 
அழகாய் சிரிக்குமோ!
பழைய இனிய 
கவிஞருக்கெல்லாம் கன்னியாய்
என்றும் உந்தன் 
இதயமெனும் வீதியிலே
என் வாழ்வு இணைந்திட 
அலைகின்றேன்!

இலையின் மேலுள்ள 
பனித்துளி போன்றவள் நான்!
நின் அன்பு ஒளியிலே 
மிளிரும் நான்
காலத்தின் விளிம்பில் 
நடமாடும் இளமங்கை!
வாழ்வு எனும் இனிமையான 
தோப்பினுள்ளே
என் நிலையின்றி உன் 
அன்பில் ஆடுகின்றேன்!
உன்னை காணாத நாள் 
வாடும் அழகுமலரே!
என்நிலை மாறி இன்பம்
 விரைவில் வருகவே!
உன் திருமுகம் காண 
இன்னும் இத்தனை நாட்களா?
விரைவில் நிலவே 
உன் திருமுகத்தைக் காட்டு!

வசந்தா பாபாராஜ்


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments