
குறள் 9:
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தானை வணங்காத் தலை.
நெறிபிறழாச் செம்மலை ஏற்க மறுத்தல் பொறியைந்தும் கொண்டும் இயங்கா நிலைக்கு பயனற்று போனதற் கொப்பு.
குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
நெறிபிறழாச் சான்றோர் வழிமறந்தால் நீந்த முடியாது துன்பக் கடல்.
2.வான்சிறப்பு
குறள் 11:
வானின்றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
வான்மழை இவ்வுலகைக் காப்பதால் அம்மழை தேனமிழ்(து) என்றேதான் செப்பு.
குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை.
பெய்தே உணவைத் தருகிறதுதானுமிங்கே நன்னீர் உணவாகும் சொல்
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments